கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த, ராஜேந்திரன் மகன் ராகீஷ், 22. பெத்தநாயக்கன்பாளையம், தும்பல் பகுதியைச் சேர்ந்த, நவ்ஷத் மகள் ரூபிகாபானு, 23. பட்டதாரியான இவர்கள், ஆத்துார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையறிந்த இருவீட்டு பெற்றோரும், இந்து, முஸ்லிம் கலப்பு திருணமத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று , வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், ஆத்துாரில் திருமணம் செய்தனர்.இன்று, பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெண்ணின் பெற்றோர், திருமணத்தை ஏற்கவில்லை. காதல் கணவர் ராகீஷூடன், ரூபிகாபானுவை அனுப்பி வைத்தனர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
வேலுார்:வேலுார் மாவட்டத்தில், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று…