இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் படத்தில் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆயுஷ்மான் குரானா, நடிகை தபூ, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். இப்படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். தபு கதாபாத்திரத்திற்கு சிம்ரன் ஒப்பந்தமாகி இருந்தனர். இந்நிலையில் தற்போது ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார்.
‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜெ.
ஜெ. ஃப்பெடரிக் இத்திரைப்படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார், ஊர்வசி, கே. எஸ். ரவிகுமார் ஆகியோர் நடிக்க, ரவியாதவ் ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குநராகச் செந்தில் ராகவன் பணிபுரிந்து வருகின்றனர்.’அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த், ப்ரியா ஆனந்த் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…