போபால்: இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்த தீனநாத் பார்கவா தனது 89வது வயதில் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்தியாவின் தேசிய சின்னம் சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று முதுகுப்புறத்தில் ஒட்டிக்கொண்டது போல் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு சிங்கங்களில் ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் மறைந்திருக்கிறது. மூன்று சிங்கங்கள் மட்டுமே பார்வைக்கு தெரியும். 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் இந்திய அரசால் இது தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் தீனநாத் பார்கவா.
இவர் 1927ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் பிடல் மாவட்டத்தில் உள்ள முல்தாய் என்ற இடத்தில் பிறந்தார். 89 வயதான இவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். கடந்த 10 ஆண்டுகளாக தீனநாத் பார்கவா இதய நோய் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் என 4 பிள்ளைகள் உள்ளனர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…