ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், அ.தி.மு.க சசிகலா அணியில் டி.டி.வி தினகரன், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன், தி.மு.க-வில் மருது கணேஷ், தே.மு.தி.க-வில் மதிவாணன், பா.ஜ.க-வில் கங்கை அமரன் போட்டியிடுகின்றனர். அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப் போவதாகக் கூறி வருகிறார்.
இது தவிர, பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…