புதுதில்லி: இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் சமாஜவாதி கட்சியின் ‘சைக்கிள்’ சின்னம் யாருக்கு எனபது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துப் பேசிய ஜைதி கூறியதாவது:
சமாஜவாதி கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது ஒரு ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி.
இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. அந்த ஆவணங்களை பரிசீலித்த பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக தாங்கள்தான் உண்மையான சமாஜவாதி கட்சி என இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் முலாயம் சிங் மற்றும் அவரது மகனும் உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் சிங் ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை அடுத்தடுத்த நாட்களில் சந்தித்து மனு கொடுத்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…