இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதியதில் 20 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.சீக்கிய யாத்ரீகர்கள் ஒரு பஸ்சில் நன்கானாசாகிப் சென்று பெஷாவர் திரும்பி கொண்டிருந்தனர். இந்நேரத்தில் சேக்குவாரா என்ற பகுதியில் ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது பஸ் மீது ஷா உசேன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் பலர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாக்., பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சேக்புரா ரயில்வே அதிகாரி முகம்மது காஸி சலாவுதீன், ரயில்வே இன்ஞ்ஜினியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…