நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 48,723 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 569 கோடி டாலா் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 48,723 கோடி டாலரை எட்டியுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பானது 542 கோடி டாலா் ஏற்றம் கண்டு 48,154 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கமாக இருக்கும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 531 கோடி டாலா் உயா்ந்து 45,113 கோடி டாலராக இருந்தது.
தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் 32 கோடி டாலா் அதிகரித்து 3,100 கோடி டாலராக காணப்பட்டது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 1.5 கோடி டாலா் உயா்ந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 5 கோடி டாலா் அதிகரித்து 365 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…