தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் இடையே எழுந்த பிரச்சினையில், தமிழ்த் திரையுலகத்தில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் எந்த புதுப்படங்களையும் வெளியிடப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. ஆனால், அதை மீறி ‘தாராவி’ என்ற ஒரே ஒரு படம் மட்டும் வெளியானது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.அடுத்து மார்ச் 16ம் தேதி முதல் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பும் நடைபெறாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதன்படி பலரும் அவர்களது படப் பணிகளை நிறுத்தி வைத்தனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் இந்த முடிவுக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு படப்பிடிப்புகளை மட்டும் மார்ச் 23ம் தேதி வரை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தனர். அதன்படி சில படங்களின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது. அவற்றை அவர்கள் முடிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன.தற்போது நடந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தால் கியூப் பிரச்சினைகளை மட்டுமல்லது மற்ற பல பிரச்சினைகளையும் முடிக்க தயாரிப்பாளர் சங்கம் தயாராகி வருகிறதாம். ஏப்ரல் வரை இந்த பிரச்சினை நீடிக்கும் என்கிறார்கள. அதற்குள் பல பிரச்சினைகளை தீர்த்துவிட்டு, புதிய தமிழ்ப் புத்தாண்டான ‘விளம்பி’ வருடத்தில் தமிழ்த் திரையுலகம் விஸ்வரூபம் எடுக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…
பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…
புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…
காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…
திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…